நமது சாஸ்திரத்தில் இரண்டுவகையான துறவிகளைப்பற்றி கூறப்பட்டுள்ளது.

 

நமது சாஸ்திரத்தில் இரண்டுவகையான துறவிகளைப்பற்றி கூறப்பட்டுள்ளது.

(மகாபாரதத்தில் இவ்வாறு உள்ளது)

..

1.முனிவன்

2.பிக்ஷு(சந்நியாசி)

..

முனிவன் உலகத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு சென்றுவிடக்கூடாது.

அதேநேரத்தில் முற்றிலும் உலக வாழ்வில் ஈடுபடவும் கூடாது.

அவனுக்கு சில கடமைகள் உள்ளன. சீடர்களுக்கு பயிற்சி கொடுப்பது, அரசனுக்கு அறிவுரைகள் சொல்வது,

உலக நன்மைக்காக யாகங்கள் செய்வது போன்றவை முக்கியமானவை

..

முனிவன் மனைவியோடு வாழலாம்,அல்லது மனைவி இல்லாமலும் வாழலாம்

அவன் தன்னிடம் உள்ளதை பிறருக்கு தானம் செய்ய வேண்டும்.

முனிவன் தான் வசிக்கும் இடத்தை ஒரு கானகம்போல் மாற்றிக்கொள்ள வேண்டும்.

சுற்றிலும் அழகிய பூஞ்சோலைகள், வளர்ப்பு மிருகங்கள், சீடர்களுக்கு பயிற்சிகொடுக்க தேயைான வசதிகள் அனைத்தும் அங்கே இருக்க வேண்டும்.

இவை எல்லாம் இருந்தாலும் அவன் பற்றற்றவனாக இருக்க வேண்டும்.

பெரும்பாலான நேரத்தை மௌனத்தில் கழிக்க வேண்டும்.

.

குறைந்த அளவு ஆடையை உடுத்திக்கொண்டு,மிக எளிமையாக வாழவேண்டும்.

 

ஒரு முனிவன் யோகத் தியானத்தில் அமரும்போது, மகிழ்வும், துயரமும், மதிப்பும், அவமதிப்பும் அவனுக்கு ஒன்றாகிப் போகின்றன. அப்படிப்பட்ட நிலையை அடைந்த அவன், இந்த உலகத்தை விட்டு, பிரம்மத்துடன் ஒருங்கிணைந்து இன்பமடைகிறான்.

..

ஒரு முனிவன், (தாயின் மடியில் உறங்கும் குழந்தையைப் போல) எதையும் எதிர்பார்க்காமல், எந்த மகிழ்ச்சியும் அடையாமல் பசுவைப் போலவோ, பிற விலங்குகளைப் போலோ உணவை உண்டால், அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் ஆன்மாவைப் போல அவன் மொத்த அண்டத்துடனும் அடையாளம் காணப்பட்டு, முக்தியை அடைகிறான்"

..

இப்படிப்பட்ட முனிவரை எல்லோரும் வணங்குவார்கள். அரசன் அவரது கட்டளைக்கு அடிபணிந்து நடக்கிறான்.

..

இனி பிக்ஷூ (சந்நியாசி) பற்றி பார்ப்போம்

..

உண்மையான பிக்ஷூ என்பவன், தனது செயல்களினால் தன்னைத் தாங்கிக் கொள்ளாமல்  எண்ணற்ற சாதனைகள் செய்திருக்க வேண்டும்.

அவன் தனது உணர்ச்சிகளை முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். 

உலக நிகழ்வுகளில் இருந்து அவன் தன்னைத் துண்டித்துக் கொள்ள வேண்டும்.

ஓர் இல்லறவாசியின் கூரைக்குக்கீழே படுத்துறங்கக் கூடாது.

அவன் மனைவியைக் கொள்ளக் கூடாது.சேவைசெய்ய சீடர்களை வைத்துக்கொள்ளக்கூடாது.

 ஒவ்வொரு நாளும் அவன் சிறிது தூரத்தைக் கடந்து கொண்டே இருக்க வேண்டும்.

தனித்து வாழவேண்டும்.

நாட்டின் பெரும்பகுதிகளில் பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் தேவையான உணவை இரந்துப் பெற வேண்டும்.

உலகியல் மக்களுடன் பேசக்கூடாது. யாருக்கும் அறிவுரைகள் வழங்கக்கூடாது.

முழுமையான மௌனத்தை கடைபிடிக்க வேண்டும்.

மழையானாலும் வெயிலானாலும் அவைகளை பொறுத்துக்கொள்ள வேண்டும்.

பிறர் ஏளனமாக பேசினாலும் தாங்கிக்கொள்ள வேண்டும்.

தனக்கு ஏற்படும் துன்பங்கள் முந்தைய பிறவிகளில் செய்த பாவங்களால் நடக்கின்றன என்று நினைக்க வேண்டும்.

..

இப்படியே வாழ்ந்தால் முற்றிலும் பாங்கள் நீங்கப்பெற்று ஆத்மாவில் நிலைபெற்று முக்தி அடைவான்.

...

சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி

 

 

 

 

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6