ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-9
.
மரணத்தை வெல்லுமா மனித இனம்?
..
டிஎன்ஏ (DNA) என்பது மரபணுத் தகவல்களைக் கொண்ட ஒரு மூலக்கூறு. டிஎன்ஏ மூலம் புதிய உயிரினங்கள் உருவாகும் செயல்முறைக்கு பல வழிகள் உள்ளன. டிஎன்ஏ பிரதியெடுப்பு, இனப்பெருக்கம், மரபணு மாற்று மற்றும் இனப்பெருக்கம் போன்ற செயல்முறைகள் இதில் அடங்கும்.
.
அழகான ஒரு மனிதரின் டிஎன்ஏ (DNA) வை பிரதி எடுத்தால் அவரைப்போல பல உடல்களை உருவாக்க முடியும்.
இதை நமது யோகிகள் காயகல்பம் என்று அழைத்தார்கள்.(உடல்களை பல பிரதி எடுத்தல்)
.
ஓர் டிஎன்ஏ (DNA) வை இன்னொரு டிஎன்ஏ (DNA) வுடன் இணைத்தால் புதிய உடல்களை மாறுபட்ட உடல்களை உருவாக்க முடியும். அதாவது சிங்கத்தின் (DNA) வை புலியின் (DNA) வுடன் இணைத்தால் புதியவகை உயிரினம் உருவாகும்.
.
இறக்கும் தருவாயில் உள்ள ஒரு மனிதனின் உயிரை(சூட்சுமஉடலை) இவ்வாறு உருவாக்கப்பட்ட டிஎன்ஏ (DNA) பிரதியெடுக்கப்பட்ட உடலுக்குள் செலுத்த முடியுமா? இதுான் கேள்வி.
முடியும் என்று நமது முற்காலத்து யோகிகள் கூறியுள்ளார்கள். இதைத்தான் அவர்கள் கூடுவிட்டு கூடுபாய்தல் என்று அழைத்தார்கள்.
இந்த முறையின் மூலம் ஏற்கனவே வயதாகிப்போன உடலில் இருந்து சூட்சும உடலை பிரித்து புதியதாக உருவாக்கப்பட்ட உடலுக்குள் செலுத்தி. அந்த உடல் மூலமாக வாழ முடியும். இதில் ஒரு சந்தேகம் வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட அந்த உடலில் ஏற்கனவே ஒரு சூட்சும சரீரமும் ஆன்மாவும் இருக்குமே! அதை எங்கே போகும்.
இதற்கான விடை மிக எளிது.
நாம் தினசரி பலரது வாழ்வில் பார்க்கிறோம். ஏற்கனவே அகால மரணமடைந்த மனிதனின் ஆவி, நல்ல உடல்நலத்தோடு இருக்கும் மனிதனின் உடலில் புகுந்து, அந்த உடலோடு ஒன்றி விடுகிறது. ஒரே தூல உடலில் இரண்டு சூட்சும சரீரங்கள் ஒன்றாகிவிடுகின்றன.
இதேமுறையில் பழைய உடலைவிட்டு வெளியேறும் மனிதன் புதிய உடலை அடைத்து தனது வாழ்க்கையை ஆரம்பிக்கிறான்.
அந்த உடல் வயதான பிறகு அதிலிருந்து வெளியேறி இன்னொரு உடலை அடைந்து அதில் வாழ முடியும்.
இப்படியே ஞானம்பெறும் வரை மனிதன் உடலுக்கு உடல் மாறிக்கொண்டே வாழ முடியும்.
..
முற்காலத்தில் யோகிகள் இந்த முறையை பயன்படுத்தியிருந்தார்கள்.
மூவாயிரம் ஆண்டுகாலம் திருமூலர் வாழ்ந்தார். பல ஆயிரம் ஆண்டுகாலம் ரிஷிகள் வாழ்ந்தார்கள் என்று நாம் படிக்கிறோம். அது இதே முறையை பயன்படுத்தித்தான். பழைய உடல்களை விட்டுவிட்டு புதிய உடல்களைக்கொண்டு அவர்கள் தொடர்ந்து வாழ்க்கிறார்கள். ஆனால் அவர்களால் தங்கள் மனத்தின் ஆற்றல் மூலம் புதிய உடல்களை படைக்க முடிந்தது. தற்போது ஆராய்ச்சி கூடங்களின் மூலம் அதை உருவாக்குகிறார்கள்.
..
மனத்தின் மூலம் புதிய மனிதர்களை உருவாக்குவதும்கூட ஒரு விஞ்ஞானம்தான்.அதற்கும் வில வழிமுறைகள் இருக்கின்றன. அவைகள் பற்றி இன்றைய விஞ்ஞானம் அறிந்திருக்கவில்லை. அதைப்பற்றிய விளக்கம் கிடைத்தால் அடுத்துவரும் பதிவுகளில் வௌயிடுகிறேன்.
..
உங்கள் கேள்விகளை +919360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும்
சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி(24-5-2025)
No comments:
Post a Comment