அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-23

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-23
-


இது ஒரு விதமான ஈர்ப்பு தான். ஆனால் இதில்  மாயை இல்லை. இந்த  ஈர்ப்பின் காரணமாகத் தான் மீண்டும் மீண்டும் வந்து போக வேண்டியிருக்கிறது. புரிகிறதா?. ஆம் அம்மா. போ இனி போய் தூங்கு. எழுதி க் கொள்கிறேன். உலகில் வேறு யாரும் உனக்கு சொந்தமானவர்கள்அல்ல என்பது.ஒரு நாள் உனக்கு தெரிய வரும். இந்த ஈர்ப்பு உண்மையில்என்ன என்பதை அப்போது நீ சரியாக புரிந்து கொள்வாய்.குடும்ப சண்டைகள் கூட அன்னையிடம் வருவதுண்டு. அவரும்  பொறுமையாக அவர்களிடம்  பேசி  சமாதானப்படுத்துவார். ஒரு முறை குருதேவரிடம்  சீடர் ஒருவரும் அவரது மனைவியும்  இவ்வாறு வந்தனர். வயதான தம்பதியினர்.இவர்கள் கூறியதையெல்லாம் கேட்ட பிறகு அன்னை  அந்த பக்தரிடம்கூறினார். இந்த வயதில் இதெல்லாம்  நன்றாகவா இருக்கிறது?  மகன் கல்லூரியில் படிக்கிறான் .இன்றோ நாளையோ திருமணம் செய்து கொள்ளும் வயதாகி விட்டது. மருமகள் வந்து இதெல்லாம் பார்த்தால் , அப்போதுதான் திருந்துவீர்கள் போல் இருக்கிறது. இனி இப்படி நடக்கக்கூடாது. நான் சொல்கிறேன் புரிகிறதா?. சரியம்மா, இனி அப்படி நடக்காது. என்று கூறினார் அந்த பக்தர். அன்னை தொடர்ந்தார்.
-
மனைவி என்பவள் வீட்டு மகா லட்சுமி. அவள் ஒரு விதத்திலும் மனம் நோகும் படி நடக்க கூடாது. அவள் என்ன தனக்காகவா எல்லாம் செய்கிறாள். உங்கள் மனைவியை பொறுத்த வரையில் , அவள் கை கொஞ்சம் தாராளம்.அவ்வளவு தான். அதனால் என்ன வந்துவிட்டது. எல்லாம் பக்தர்களின் குடும்பமே அல்லவா? அவளை நன்றாக வைத்து கொள்ளுங்கள். கணவனும் மனைவியும் சென்றனர். அதன் பிறகு அவர்களின் வீட்டில் எந்தப் பிரச்சனையும் இல்லை.லலித்  சட்டோபாத்யாயர் என்பவரைப் பற்றி பேச்சு வந்தது. அன்னையின் அருள் பெற்றவராக இருந்தும் அவரால் குடிபழக்கத்தை விட முடியவில்லை. ஆனால் அன்னையிடம் அவர் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவரைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது அன்னை கூறினார், ராட்டினத்தில் பல வண்ண நூல்களைச் சுற்றி வைக்கிறோம். முதலில் சிவப்பு நிறம் ,பிறகு நீலம் என்ற வரிசையில் சுற்றுவதாக வைத்துக்கொள்வோம். அதை மீண்டும்  எடுக்கும் போது அதே வரிசையில் தான் வெளி வரும். ஆனால் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. முதலில் சுற்றும் போது பிணைக்கப்படுகிறது. இரண்டாவது சுற்றில் பிணைப்பில் இருந்து விடுபடுகிறது.ஆனால் பார்ப்பதற்கு ஒரு போலவே இருக்கும். அம்மா நான் முதலில் குருதேவரை  தரிசித்தபோது அவரது திருமேனியிலிருந்து ஒளி வந்து கொண்டிருந்தது.ஒரு கண்ணாடி துண்டில் சூரியனது கதிர்கள் விழுந்தால் எப்படி ஒளிக்கிரணங்கள் புறப்படுமோ அத்தகைய ஒளி அது. உண்மைதான் மகளே ! நீ கண்டது உண்மை தான்.அவரது உடம்பில்எண்ணெய் தேய்க்கும் போது சில வேளைகளில் நானும் அத்தகைய ஒளியைக் கண்டதுண்டு. தீட்சை பெற்ற பக்தர் ஒருவர் மடத்திலுள்ள சாது ஒருவரிடம்  வாக்குவாதம் செய்ய நேர்ந்தது.அதை கேள்விப்பட்ட அன்னை கூறினார். ஒருவர் மூன்று விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.1.ஆற்றின் கரையிலுள்ள வீடு,

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6