Wednesday, 15 August 2018

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-3


அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-3
-----
குதேவரின் பிள்ளைகள் வாழ்கின்ற இடத்திற்கு(தன்னிடம்) வந்திருக்கிறாய்.இங்கே உனக்கு மன அமைதி கிடைக்கவில்லை என்றால் வேறு எங்கிருந்து கிடைக்கும்? என்ன அற்ப வாழ்க்கை வாழ்கிறாய்?
--
உன் மனத்தில் பாவம் உள்ளது.அதனால்தான் மனஅமைதி கிடைக்கவில்லை.எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்ததால் மூளை சூடாகிவிட்டது.அதனால்தான் தீய எண்ணங்கள் உன்மனத்தில் எழுகின்றன
-
குருதேவரின் லீலையை பார்த்தாயா அம்மா!எப்படிப்பட்ட உறவினருடன் நான் வாழவேண்டியிருக்கிறது.ஒருத்திக்கு ஏற்கனவே பைத்தியம்.இன்னொருத்தி பைத்தியநிலையை நெருங்கிக்கொண்டிருக்கிறாள்.இன்னொருத்திக்கு உருப்படியான புத்தி சிறிதுகூட இல்லை.
-
மகளே! இந்த மானிடப் பிறவியைப் பெறுவது பெரிய பாக்கியம்.சாதனைகளில் ஆழ்ந்து ஈடுபடு.பாடுபட வேண்டும்.பாடுபடாமல் ஏதாவது நடக்குமா?
-
பால்போல் நிலவு காய்கின்ற இரவுகளில் நிலவொளியில் அமர்ந்து கூப்பிய கரங்களுடன் சந்திரனைப் பார்த்து, உனது ஒளிபோல் என் உள்ளத்தையும் களங்கமற்றதாக ஆக்குவாய் என்று பிரார்த்திப்பேன்
-
சாதனைகள் செய்யச்செய்ய,என்னுள் இருபப்வர் யாரோ அவரே உன்னுள்ளும் இருக்கிறார்,ஒரு மீனவனிலும் தோட்டியிலும் இருக்கிறார் என்பதைக் காண்பாய்.அப்போது பணிவு பிறக்கும்.
-
ஆகா,குருதேவர் என்னை எப்படி நடத்தினார்.என் மனம் புண்படும் வகையில் ஒரு வார்த்தைகூட சொன்னது கிடையாது.எனக்கு எது நன்மையை செய்யுமோ அதை மட்டுமே செய்தார்.வேலை செய்யாமல் சோம்பியிருந்தால் தீய எண்ணங்கள் மனத்தில் எழும் என்பார் அவர்
--
ஆகா! தட்சிணேசுவரத்தில் கழித்த நாட்கள்தான் எவ்வளவு அற்புதமானவை.குருதேவர் பாடுவார்.நான் நகபத் வரந்தாவில் மறைத்திருந்த மூங்கில் தட்டியின் பின்னால் மணிக்கணக்கின் நின்று அதனை கண்டு மகிழ்வேன்.அவரை கைகள்கூப்பி வணங்குவேன்.என்னவோர் ஆனந்தம்.மக்கள் இரவு பகலாக வருவார்கள்.இறைவனைப்பற்றி பேசுவார்கள்.
-
மனம் ஒரு மதயானை போன்றது.அதனால்தான் எல்லாவற்றையும் விவேகத்துடன் அணுகவேண்டும்.உண்மை எது எண்மையற்றது எது என்பதை ஆராய்ந்து அறிய வேண்டும்.இறைவனைப்பெறுவதற்கு மிகுந்து பாடுபட வேண்டும்.
--
தட்சிணேசுர நாட்களில் என்மனம் எப்படி இருந்தது! யாரோ புல்லாங்குழல் வாசிப்பார்கள்.இறைவனே புல்லாங்குல் வாசிப்பதாக எனக்கு தோன்றும்.உடனே கடவுளை காணவேண்டும் என்ற வேட்கை எழும்.அப்படியே நான் சமாதியில் ஆழ்ந்துவிடுவேன்
--

No comments:

Post a Comment