அன்னை சாரதாதேவின் அன்புமொழிகள்-பாகம்-1


அன்னை சாரதாதேவின் அன்புமொழிகள்-பாகம்-1
-
ஒரு கணம்கூட வேலை செய்யாமல் இருப்பது நல்லதல்ல.பற்றில்லாமல் வேலை செய்யச்செய்ய கர்மத்தளை உடைபடுகிறது.பிறகு பற்றற்றநிலை ஏற்படுகிறது.
-
ஏதோ காரணத்திற்காக நளினி கோபத்துடன் வந்து அமர்ந்தாள்.அன்னை அதை கண்டித்தார்.பெண்களுக்கு இவ்வளவு கோபம் கூடாது.பொறுமை வேண்டும்.சிறுவயதில் பெற்றோர்,இளமையில் கணவன் இவர்களின் பாதுகாப்பு பெண்களுக்கு கட்டாயம் தேவை
-
மந்திரம் தந்திரம் எல்லாம் ஒன்றுமில்லை மகளே! பக்தியே எல்லாம். குருதேவரே எல்லாம்.குருவும் அவரே,இஷ்டதெய்வமும் அவரே.அவரே எல்லாம்
-
வாழ்க்கையில் அடிபட்டு அதன்பிறகு பலர் இறைவா என்பார்கள்.ஆனால் சிறுவயதில் மனம் புத்தம்புது மலராக இருக்கும்போதே அதை பகவானிடம் சமர்ப்பிப்பவனே பாக்கியவான்
--
கணவனும் மனைவியும் ஒற்றுமையாக இருந்தால்தான் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும்
--
ஒருவர் தனது புண்ணிய பாங்களைக் குறித்துப் பேசினால் கேட்பவர்களும்கூட அவற்றில் ஏதோ கொஞ்சமாவது பங்கை ஏற்றே தீரவேண்டும்.
ஒருவன் உன்னிடம் தன் பாவத்தை சொல்வதாக வைத்துக்கொள்வோம்,பின்பு எப்போது அவனை நினைக்க நேர்ந்தாலும் அவனது பாவமும் சேர்ந்தே நினைவில் வரும்.அது உன் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
---
பணத்தில் என்ன இருக்கிறது மகளே! குருதேவரால் பணத்தை தொடக்கூட இயலாது.கை பின்னுக்கு இழுத்துக்கொள்ளும்.இந்த உலகம் உண்மையில்லை கடவுள் ஒருவரே உண்மை என்பார் அவர்
-
எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியுடன் இருக்கும் வகையில் உன் மனத்தை அமைத்துக்கொள்ள வேண்டும்.
--

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?