முக்தி என்பது என்ன?

 முக்தி என்பது என்ன?

..

நமது ஆன்மா, பரமாத்மாவுடன் இணைவதுதான் முக்தி.

வெளிநாடுகளில் இருந்து வந்த மதங்களில் முக்தி பற்றிய கருத்து கிடையாது.

சொர்க்கம் செல்வது முக்தி அல்ல.

ஆசைகள் உள்ளவர்கள் புண்ணிய பலனின் காரணமாக சொர்க்கதில் சென்று அந்த ஆசைகளை அனுபவிக்கலாம் என்று நமது மதம் கூறுகிறது.

புண்ணியம் தீர்ந்தவுடன் மறுபடியும் மனிதனாக பிறக்க வேண்டும்.

நூற்றுக்கணக்கான சொர்க்கங்கள் உள்ளன.

சக்தி வாய்ந்த மகான்கள் தங்கள் தவ வலிமையால் சொர்க்கம் மற்றும் நரகத்தை தோற்றுவிக்கிறார்கள்.

இந்த சொர்க்கங்கள் காலத்தால் அழியும் தன்மை கொண்டது.

புராணங்களில் குறிப்பிடப்படும் பல்வேறு சொர்க்கங்கள் தற்போது இல்லை.

இது பற்றி விரிவாக தேவைப்படுபவர்கள் சந்தேகங்களைக் கேட்கலாம்.

..

முக்தி என்பதில் பல வகைகள் உள்ளன.

.

கைலாயம், வைகுண்டம்,சத்தியலேகம்,ரிஷிலோகம், போன்ற உயர்ந்த உலகங்களுக்கு செல்பவர்கள் உடனடியாக முக்தி அடைவதில்லை. அந்த உயர்ந்த லோகத்தில் பல லட்சம் ஆண்டுகள் அல்லது பல ஆயிரம் ஆண்டுகள் தவத்தில் மூழ்கியிருப்பார்கள். அல்லது சிவன்,விஷ்ணு போன்ற தெய்வங்களுக்கு சேவை செய்துகொண்டிருப்பார்கள்.

இதேபோல பல உயர்லோகங்கள் உண்டு.

சிலர் அங்கிருந்தபடியே படிப்படியாக முக்தி அடைவார்கள் அதற்கு கிரமமுக்தி என்று பெயர்.

சிலர் ஆண்டவன் ஆணையை ஏற்று பூமியில் மனிதனாகப்பிறந்து பக்தியை நிலைநாட்டிவிட்டு மறுபடியும் வந்த இடத்திற்கே திரும்பி செல்வார்கள். உதாரணமாக சுந்தரர் போன்றவர்கள்.இவர்களை ஈஸ்வரகோடிகள் என்று அழைப்பார்கள்.

சிவனை இஷ்ட தெய்வமாக வணங்கும் மக்களிலேயேகூட பல பிரிவுகள் உண்டு. 

அதேபோல விஷ்ணுவை தெய்வமாக வணங்கும் மக்களிலேயேகூட பல பிரிவினர் உண்டு.

இவர்கள் அனைவரும் ஒரே சொர்க்கத்திற்கு செல்வதில்லை.

உதாரணமாக சைதன்யரை குருவாக ஏற்கும் வைணவர்கள் செல்லும் இடமும், ராமானுஜரை குருவாக ஏற்கும் வைணவர்கள் செல்லும் இடமும் ஒரே இடமாக இருக்காது.

பூமியில் எப்படி பல நாடுகளும்,பல மாகாணங்களும் உள்ளனவோ அதேப்போல சொர்க்கத்திலும் நரகத்திலும் பல மகாணங்கள் உள்ளன.

எல்லோரும் ஒரே சொர்க்கத்திற்கு செல்கிறார்கள். எல்லோரும் ஒரே நரகத்திற்கு செல்கிறார்கள் என்று எண்ணுவதுதான் குழப்பத்திற்கு காணம்.

..

அன்னை சாரதாதேவி ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார். ஸ்ரீராமகிருஷ்ணரை இஷ்டதெய்வமாக வணங்கும் பக்தர்கள்,முக்தி அடைய விரும்பாதவர்களுக்காக ஸ்ரீராமகிருஷ்ணர் புரிய சொர்க்கத்தை உருவாக்கியிருக்கிறார். அதற்கு ஸ்ரீராமகிருஷ்ண லோகம் என்று பெயர்.ஸ்ரீராமகிருஷ்ணரின் தொண்டர்கள் அங்கே பல ஆண்டுகள் தவத்தில் ஈடுபட்டிருப்பார்கள் என்று கூறுகிறார்.

..

இவ்வாறு மகான்களால் புதிய சொர்க்கத்தை உருவாக்க முடியும்.

..

இவைகள் எல்லாம் நேரடியாக முக்தியைக் கொடுக்காது.

ஆனால் படிப்படியாக முக்தியைக்கொடுக்கும்.

மிகச்சிலரால் மட்டும்தான் இந்த இடங்களுக்குச் செல்ல முடியும்.

..

ரிஷிலோகம் என்று ஒரு இடம் இருக்கிறது. பல ரிஷிகள் அங்கே லட்சக்கணக்கான ஆண்டுகளாக மரபொம்மைகள்போல தவம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

தவம் செய்வதில் கிடைக்கும் பிரம்மானந்தத்தை அவர்கள் அனுபவித்துக்கொண்டிருப்பார்கள்.

..

நேரடி முக்தி என்பது இந்த உலகத்தில் வாழும்போதே அல்லது மரண தருவாயில் பரமாத்மாவுடன் இணைவது.

இதனால் எல்லையற்ற ஆனந்தம் கிடைக்கும்.

முக்தி அடைபவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.

முக்தி அடைபவர்கள் இறப்பதில்லை.அதை இறப்பு என்று கூறமுடியாது. அது என்னெற்றும் வாழும் நிலை.

கனவிலிருந்து விழிப்பதுபோல இந்த உலக வாழ்விலிருந்து விழிக்கிறோம்.

அப்படி விழக்கும்போது நாம் மட்டுமே இருப்போம். அப்போது நாம் கடவுளாக இருப்போம்.

மனிதனாக பிறந்ததோ,வாழ்ந்ததோ,கனவு கண்டதோ எந்த நினைவும் இருக்காது.

அது பரம ஆனந்த நிலை.

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?