தலாய்லாமா மறுபிறப்பின் ரகசியம் என்ன?
..
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லீம்களின் படையெடுப்பு காரணமாக பௌத்தர்கள் மலை பகுதிகளை நோக்கி செல்ல நேர்ந்தது.நேபாளம்,பூடான்,திபெத்,அருணாச்சல்,லடாக் போன்ற பகுதிகளில் வாழ்ந்த புத்தமதத்தினர் வஜ்ராயன புத்தமத பிரிவை சேர்ந்தவர்கள். வஜ்ராயன பௌத்தத்தை நிறுவியதில் குரு பத்மசாம்பவா.
வஜ்ராயன பௌத்தம் என்பது மஹாயான புத்தமத பிரிவுகளில் ஒன்று. இலங்கை,பர்மா,தாய்லாந்து,வியட்னாம் போன்ற நாடுகளில் உள்ளது ஹீனயான புத்தமதம்.சீனா,ஜப்பான்,கொரியாவில் உள்ளது மஹாயான புத்தமதம்.
..
வஜ்ராயன பௌத்தத்தை நிறுவியதில் பத்மசாம்பவா தான் முதல் குரு. அவரே மறுபடி மறுபடி பிறந்து வந்துள்ளார்.
இன்றைய தலாய்லாமாவும் பத்மசாம்பவா ஒருவரே,உடல்தான் மாறுபட்டுள்ளது.
..
பத்மசாம்பவா வெறும் குரு மட்டுமல்ல அவர் முழு வஜ்ராயன பௌத்தர்களுக்கும் அரசரும் அவரே.
லாமா என்றால் மொட்டையடித்த துறவி. தலை என்பது தலைவர். லாமாக்களின் தலைவர்- தலைலாமா.
வஜ்ராயன பௌத்தத்தை பொறுத்தவரை லாமாக்களுக்கு மறுபிறப்பு கிடையாது. அவர்கள் நிர்வாண நிலையை அடைவதற்காக வாழ்நாள் முழுவதும் தவத்தில் ஈடுபடுவார்கள்.
குடும்ப வாழ்வில் ஈடுபட்டுள்ள மக்கள் மறுபடிமறுபடி பிறக்க வேண்டும்.பொதுவாக ஒவ்வொடு குடும்பத்திலும் ஒருவரை சிறுவயதிலேயே லாமாவாக அனுப்பி விடுவார்கள்.இதனால் லாமாக்களின் புண்ணியம் அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
..
எல்லா குருமார்களும் தனது சீடர்கள் முக்தி அடைவதற்காக தான்மட்டும் முக்தி அடையாமல் காத்திருப்பார்கள். எல்லா சீடர்களும் முக்தி அடைந்த பிறகு குரு முக்தி அடைவார்.
.
பத்மசாம்பவா குரு மட்டுமல்ல அவர் மக்களை ஆளும் அரசரும்கூட, எனவே மக்களை காப்பதற்கும்,மடங்களை காக்கவும், லாக்களுக்கு வழிகாட்டியாக இருக்கவும் அவர் மீண்டும் மீண்டும் மனித உடலில் பிறக்க தீர்மானித்தார்.
சூட்சும உடலில் இருந்து வழிகாட்ட முடியாதா? முடியும்.
அப்படி செய்தால் பல குருமார்கள் புதிதாக உருவாவார்கள். மதம் பல துண்டுகளாக பிரிந்துபோகும். மக்கள் பல பிரிவுகளாக பிரிந்துபோவார்கள்.
இந்து மதத்தில் பல குருக்கள் இருக்கிறார்கள்.அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு புதிய மதத்திதை நிறுவியுள்ளார்கள்.
திபெத்தில் இதற்கு வாய்ப்பு இல்லை. தலாய்லாமாவை மிஞ்சி யாரும் வளர்ச்சியடைய முடியாது.
இது மதத்தின் சுதந்திரமற்ற சர்வாதிகாரபோக்கை காட்டுகிறது.இயற்கை எல்லா நியதிகளையும் உடைத்தெறியும் தன்மை கொண்டது. எல்லா சட்டதிட்டங்களும் ஒரு காலத்திற்கு பிறகு இல்லாமல்போய்விடும்.
சீனாவின் ஆக்கிரமிப்பு தலாய்லாமாவின் அரசபதவியை பறித்துவிட்டது.இப்போது இந்தியாவில் அவர் ஒரு விருந்தினராகவே உள்ளார்.
..
தலாய்லாமா மீண்டும் எப்படி பிறப்பார்?
..
தலாய்லாமா இறுதி கட்டத்தை நெருங்கும்போது தனது தூலஉடலைவிட்டு சூட்சும உடலுக்கு சென்றுவிடுகிறார்.
தொடர்ந்து அவர் வசித்த ஆசிரமத்திலேயே சூட்சும உடலில் வாழ்கிறார். பிறகு ஞானம் கொண்ட லாமாக்கள் சிலர் சேர்ந்து தலாய்லாமா மீண்டும் எங்கே பிறந்துள்ளார் என்பதை அறிய பல இடங்களில் தேடுகிறார்கள்.
உண்மையில் தலாய்லாமா மீண்டும் பிறப்பதில்லை.அவர் சூட்சுஉடலில் அங்கேயே வாழ்ந்துகொண்டிருப்பார்.
சத்துவ குணம் கொண்ட சிறுவன் ஒருவனை தேடுவதுதான் லாமாக்களின் பணி. இருப்பவர்களில் யார் சிறந்தவனோ அவனை நேர்ந்தெடுத்து ஆசிரமத்திற்கு அழைத்துவருவார்கள்.
அந்த சிறுவனை உடலே புதிய தலாய்லாமா என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
சில நாட்கள் மடத்தில் தங்க வைப்பார்கள், அவனது உடலையும் மனத்தையும் பக்குவப்படுத்துவார்கள்.இதற்கு பல்வேறு மந்திரங்கள்,சடங்குகள் செய்வார்கள்.
.
ஏற்கனவே சூட்சும உடலில் வசிக்கும் தலாய்லாமாவின் ஆன்மா சிறுவனின் உடலுக்குள் சென்று தன்னை அதனோடு ஐக்கியப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு சில காலம் பிடிக்கும்,அவ்வாறு முழுமையாக பழைய ஆன்மா புதிய உடலுக்குள் சேர்ந்த பிறகு அந்த சிறுவனின் உடலிலும் மனதிலும் மாற்றங்கள் தென்படும்.முகத்தில் பொலிவும்,ஞானமும் சிறுவனிடம் வெளிப்படும் .அதன் பிறகு அவரை புதிய தலைவராக தேர்ந்தெடுப்பார்கள்.
..
இந்த நடைமுறை என்பது பழைய காலத்தில் நமது நாட்டில் உள்ள பழக்கம்தான். மேல் உலகில் வாழும் தெய்வங்கள் பக்தனின் உடலில் குடிகொண்டு ஆசி வழங்கும் முறை இது.
..
உங்கள் சந்தேகங்களை 9360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மெசேஜ் மூலமாக கேட்கலாம்
சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி(7-7-2025)
No comments:
Post a Comment