இல்லறத்தார்கள் முக்தி பெறுவதற்கான வழிகள்
..
இதற்கு முன்பு உள்ள ஒரு கட்டுரையில் முக்தி பெறுவதற்கான இரண்டு வழிகள் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.அவை 1.அனைத்தையும் விடும் வழி மற்றும் 2.அனைத்தையும் ஏற்கும் வழி
.
அப்படியென்றால் இல்லறத்தார்களுக்கு இல்லறத்தில் இருந்தபடியே முக்தி பெற வழி இல்லையா?
இருக்கிறது.
இல்லறத்தில் இருந்தபடியே அனைத்தையும் விடும் வழியை பயிற்சி செய்தால் பல தொந்தரவுகள் ஏற்படும் என்று முன்பு உள்ள கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.
ஏற்கனவே அதை படிக்காதவர்கள் ஒருமுறை படிக்கவும்.
இது அதன் தொடர்ச்சி கட்டுரை
..
அனைத்தையும் ஏற்கும் வழியை இல்லறத்தார்கள் பயிற்சி செய்யலாம்.
அதில் பல பிரிவுகள் இருக்கின்றன.
1.பலன் கருதாமல் நற்கர்மங்கள் செய்து அதன் மூலம் முக்திபெறலாம்
2.இஷ்ட தெய்வத்திடம் பக்தி செய்வதன் மூலம் முக்தி பெறலாம்
3.குரு பக்தி மூலம் முக்தி அடையலாம்
4.கணவனை தெய்வமாகவோ அல்லது மனைவியை தெய்வமாகவோ நினைத்து பணிவிடைகள்புரிந்து முக்தி அடையலாம்
5.குழந்தைகளை தெய்வமாக நினைத்து அவர்களை வளர்த்து முக்தி அடையலாம்.
இன்னும் பல வழிகள் உள்ளன.
இவை அனைத்தும் அன்பை அடிப்படையாகக்கொண்டது. இந்த வழியில் முக்தியை நோக்கி செல்கிறோமோ இல்லையா என்பதை நாம் பரிசோதித்துக்கொள்ள முடியும்.
நம்மிடம் அன்பு வளர்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். முன்பைவிட அன்பு வளர்கிறதா? அப்படியானால் சரியான பாதையில் செல்கிறோம்.
அன்பு என்று சொல்லும்போது கண்டிப்பும் தேவை. பிறர் செய்யும் தவறுகளை கண்டும் காணாமலும் இருப்பது அன்பு அல்ல. பிறரது நலத்திற்காக கண்டிப்போடு நடப்பதும் அன்புதான்.
ஞானமும் அன்பும் ஒன்றுக்கொன்று இணைந்தவை. அன்பு வளரும்போது ஞானமும் வளரும். பல ஆன்மீக கருத்துக்கள் தானாக புரிய ஆரம்பிக்கும். சந்தேகங்கள் படிப்படியாக விலக ஆரம்பிக்கும்.
ஒரே குரு,ஒரே பாதை,ஒரே மனத்தை உடையவர்களிடம் நட்பு வைத்துக்கொள்ள வேண்டும்.
பல்வேறு குருக்களின் உபதேசங்களைப் படித்தால் குழப்பம் ஏற்படும்.
..
இல்லறத்தார்கள் அன்பு வழயில் செல்லும்போது படிபப்டியாக பற்றற்றநிலை ஏற்படும். ஞானம் ஏற்படும்.அன்பு விரிவடையும் முக்தி ஏற்படும்.
இல்லறத்தில் இருந்தபடியே அன்றாட கடமைகளை செய்தபடியே இந்த நிலையை அடையலாம்.
உலகியலில் உழன்றுகொண்டிருக்கும் மக்களிடமிருந்து சற்று விலகியிருக்க வேண்டும். உலகியல் மக்கள் ஆன்மீகத்தை விரும்ப மாட்டார்கள்.ஆன்மீக வழியில் செல்பவர்களை ஏமாற்ற நினைப்பார்கள் அல்லது அவர்களை அலட்சியமாக நினைப்பார்கள்.
..
முக்தியத் தேவைகள்
1.முக்தி அடையவேண்டும் என்ற தீவிர ஏக்கம்
2.பாவத்தை உருவாக்கும் தவறுகள் செய்யாமல் இருக்கவேண்டும்.
3.ஏதாவது ஒரு பாதையை தீவிரமாக பின்பற்ற வேண்டும். பல பாதைகளில் கால் வைக்கக்கூடாது.
4.ஞானிகளின் உபதேசங்களை படித்து ஞானத்தை பெற முயற்சிக்க வேண்டும்.
..
இல்லறத்தார்கள் முயன்றால் முக்தி அடையலாம். ஆனால் முக்தி அடைய வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் மிகக்குறைவே. யாருக்கு இது கடைசி பிறவியோ அவர்களுக்குத்தான் முக்தி அடைய வேண்டும் என்ற தீவிர ஏக்கம் ஏற்படும்.
இல்லற வாழ்க்கை என்பதே முக்தி அடைவதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் என்பதை பலர் அறிவதில்லை. இல்லறத்தை துறந்தால்தான் முக்தி அடைய முடியும் என்று தவறாக நினைக்கிறார்கள்.
ஆனால் இது மெதுவான,பலமான பாதை.இதில் வெற்றி அடைவதற்கான வாய்ப்பு அதிகம்.
இல்லறத்தை துறப்பவர்கள் வேகமாக முக்தியை நோக்கி செல்வார்கள்,அதேநேரம் அதில் தோல்வியடைவதற்கும் வாய்புகள் அதிகம்.
இல்லறம் என்பது கோட்டைக்குள் இருந்து எதிரிகளுடன்(புலன்களுடன்) போரிடுவது போன்றது.
துறவறம் என்பது திறந்த வெளியில் நின்று எதிரிகளுடன்(புலன்களுடன்) போரிடுவது போன்றது.
கோட்டைக்குள் நின்று போரிடுவது வசதியானது. வெற்றிக்கான வாய்ப்புகளும் அதிகம் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார்.
No comments:
Post a Comment