ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-19

 ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-19

..

அணுக்களாக நாம் மாறாமல் அணுவை பார்க்க முடியாது.

..

நாம் எதைப் பார்க்கிறோமோ அதுவாக ஆகிறோம்.நாமே அதுவாக இருக்கிறோம்,பிறகு அதையே நாம் பார்க்கிறோம் என்று நமது தத்துவங்கள் கூறுகின்றன. 


நம்மைசுற்றியுள்ள அணுக்களை நம்மால் ஏன் காண முடிவதில்லை? நாம் அணுக்களாக மாறினால் அதைக் காணமுடியும்.

ஒரு நுண்ணோக்கி மூலமாக அணுவைப் பார்க்கும்போது குறிப்பிட்ட அந்த நேரத்திற்கு நாம் ஒரு அணுவாக இருக்கிறோம். நாம் அணுவாக இருப்பதால்தான் நம் கண்களுக்கு அணுக்கள் தெரிகின்றன. அதேபோல பிரபஞ்சத்தில் உள்ள galaxy யை பார்க்கும்போது நாம் galaxy. ஆக இருக்கிறோம்.

இது பற்றி விஞ்ஞானிகள் சிறிதும் யோசிப்பதில்லை.அதனால்தான் அவர்களால் பல கேள்விகளுக்கு விடைகாண முடிவதில்லை.

மகான்கள் மிகப்பெரிய சூரியன்களையும், கிரகங்களையும் தியானத்தில் ஆழந்திருந்தபோது கண்டதாக கூறியிருக்கிறார்கள். அவர்களால் எப்படி முடிந்தது?

அவர்கள் தங்களை தற்காலிகமாக மிகப்பெரியதாக மாற்றிக்கொண்டார்கள். சிலர் galaxy. அளவுக்கு தங்களை பெரிதாக்கிக்கொண்டார்கள். அதனால் அவர்களால் பலவற்றைக் காண முடிந்தது. மனிதனால் இப்படி பெரிதாக முடியுமா?

தொலை நோக்கி மூலம் மனிதன் பார்க்கும்போது தற்காலிகமாக மனிதன் விரிவடைகிறான் பெரிதாகிறான்.

.

நம் தத்துவம் என்ன சொல்கிறது பார்ப்போம். 

ஆத்மாவால் ஆத்மாவை உணர வேண்டும். நீ எப்போது ஆத்மாவாக மாறுகிறாயோ அப்போதுதான் பரமாத்மாவை உணர்வாய். ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்றுதான் என்பதை அப்போது உணர்வாய் என்று கூறுகின்றன.

.

மனிதன் புறப்பொருட்களை ஆராயும்போது அந்த புறப்பொறுள் மயமாக ஆகிவிடுகிறான்.அதனால் அகமுகமாக ஆராய முடிவதில்லை. அகமுகமாக ஆராயும்போது புறப்பொருட்கள் அவனைப்பொறுத்தவரை மறைந்துவிடுகின்றன.

..

மனிதன் இந்த சிறிய உடலுக்குள் மட்டும்தான் இருக்கிறானா?

இந்த உலகத்தில் எதையெல்லாம் நாம் பார்க்கிறோமோ அது அனைத்துமாக நாமே இருக்கிறோம்.

இவைகள் எல்லாம் வெறும் கருத்துக்கள் மட்டும் அல்ல. மகான்கள் இதை அனுபவப்பூர்வமாக உணர்கிறார்கள், அனுபவிக்கிறார்கள். அவர்கள் அனுபவித்ததை நமக்கு கூறியிருக்கிறார்கள்.

.

.

நாம் கனவு காணும்போது,அந்த கனவில் வரும் அனைத்தையும் உருவாக்கிறது நாம்தான். இருந்தாலும் கனவு காணும்போது அதை நாம் அறிவதில்லை.கனவு கலைந்த பிறகுதான் அதுபற்றியஅறிவு நமக்கு வருகிறது.

கனவு காணும்போது கனவில் ஒரு பகுதியாக நாம் மாறிவிடுவதால் கனவுபற்றிய முழு அறிவும் நடக்கு கிடைப்பதில்லை.இருந்தாலும் கனவில் வரும் அனைத்தையும் உருவாக்கியது நாம் தான்.

.

அதேபோல இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் உருவாக்கியது நாம்தான் என்பதை நாம் விழிப்படையும்போது உணர்வோம். அப்போது இந்த பிரபஞ்சம் நம் கண்களுக்குத் தெரியாது. மீண்டும் இந்த பிரபஞ்சத்திற்குள் நுளையும்போது விழிப்புநிலை மறந்துவிடுகிறது. நாம்தான் இந்த பிரபஞ்சத்தைப் படைத்தோம் என்பது மறந்துவிடுகிறது. கனவில் எப்படி அல்லல்படுகிறோமோ அப்படி உழல்கிறோம்.

தினமும் இந்த உண்மையை கனவின் மூலம் ஆன்மா நமக்கு உணர்த்துகிறது.

..

பல்வேறு உடல்கள் மூலம் ஒருவரே இந்த அனைத்து கனவுகளையும் கண்டுகொண்டிருக்கிறார்.ஒருவர் கனவிலிருந்து விழிப்படைந்தாலும் இந்த கனவு தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். இதனால்தான் இதை மாயை என்கிறார்கள்.

கடவுள் கனவு காண்பதில்லை. அவர் விழிப்புநிலையில் இருக்கிறார். நாம் விழிப்படையும்போது கடவுளாகிறோம்.

ஆனாலும் கனவு நடந்துகொண்டேதான் இருக்கும். எப்படிப்பட்ட கனவு நடந்துகொண்டிருக்கிறது என்பதைக் காணவேண்டுமானால் விழிப்படைந்தவர் மீண்டும் கனவுக்குள் வந்தாக வேண்டும். அதாவது இந்த பிரபஞ்ச மாயைக்குள் வந்தாக வேண்டும். அப்போது நான் கடவுள் என்பது மறைந்துவிடும். கடவுள் மாயைக்குள் வருவதில்லை.

யார் மாயைக்குள் வந்தாரோ அவர் கடவுள் அல்ல.

..

இந்த தத்துவத்தை புரிந்துகொள்வது மிகவும் கடினம். ஆனாலும் புரிந்துகொள்ள முடியும் விழிப்படைந்தவர்களால் முடியும்.

.

உங்கள் சந்தேகங்களை 9360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மெசேஜ் மூலமாக கேட்கலாம்

சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி(5-7-2025)

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?