Posts

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-4

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-4 - ஓர் அடி கிடைத்தால்,இரட்டிப்பு கோபத்துடன் பத்து அடி திருப்பி அடிக்கவேண்டும்.அப்படி செய்தால்மட்டுமே அவன் ஓர் ஆண்மகன் - எனது ஆனந்தத்திற்கு வேறுயாரும் தேவையில்லை.காலம்காலமாக நான் தனியாகவே உள்ளேன்.ஏனெனில் நான் முக்தனாகவே இருந்தேன் - யார் தன்னில் மட்டும் ஆனந்தம் காண்கிறானோ,தன்னுள்ளேயே ஆசைகளின் நிறைவைக் காண்கிறானோ அவன்தான் பாடங்களைக் கற்றவன் - இது ஒரு கனவுலகம்.இங்கே ஒருவன் இன்பத்தை அனுபவிக்கிறானா,துன்பத்தை அனுபவிக்கிறானா என்பது பொருட்டே அல்ல.இரண்டும் கனவுகள் - பற்று வைப்பது, பற்றை விடுவது இரண்டும் பூரணமாக வளர்க்கப்பட்டால் அவை மனிதனை உயர்ந்தவனாக மகிழ்ச்சி நிறைந்தவனாக ஆக்கும் - தன் முயற்சியாலேயே தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பது எல்லா விஷயங்களிலும் உண்மையாக பொருந்தும் - எல்லா செயல்களிலும் ஆரம்பத்தில் பல தடைகள் இருக்கத்தான்செய்யும்.காலப்போக்கில் பாதை சீராகிவிடும் - உன்னிடம் எல்லையற்ற பொறுமையும்,விடாமுயற்சியும் இருக்குமானால் வெற்றி வந்தே தீரும் - இதயத்தின் நாடிகள் 108 அதில் கருணை மையம் என்று அழைக்கப்படும் இடம் உள்ளதே அங்குதான் ஆன்மாவின் கோட்டை உள்ள...

ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-16

ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-16 - பகவான் சொன்னது - 16.1 அஞ்சாமை, உள்ளத்தூய்மை, ஞானத்திலும் யோகத்திலும் நிலைத்திருத்தல்,தானம்,தமம்(உடலை அடக்குதல்) யக்ஞம்,சாஸ்திரங்களை படிப்பது,தபம்,நேர்மை - 16.2 அஹிம்சை, சத்தியம்(உண்மை பேசுதல்) போகமின்மை,துறவு,அமைதி,கோள்சொல்லாமை, உயிர்களிடத்து இரக்கம், பிறர்பொருளை விரும்பாமை,மிருதுத்தன்மை,நாணம்.மனபலம் - 16.3 தைரியம், மன்னிக்கும் குணம்,உறுதி,தூய்மை,வஞ்சகமின்மை,செருக்கின்மை இவைகள் அனைத்தும் தெய்வசம்பத்துடன் பிறந்தவனுக்கு இயல்பானவை - 16.4 பார்த்தா, பகட்டு ,இறுமாப்பு, தற்பெருமை, சினம்,கடுமை, அறிவின்மை. இவைகள் அசுரகுணத்துடன் பிறந்தவனுக்கு உண்டு - 16.5 தெய்வ சம்பத்தானது மோஷத்தின் பொருட்டு. அசுர சம்பத்து பந்தப்படும் பொருட்டு என்றும் கருதப்படுகிறது. பாண்டவா.வருந்தாதே தெய்வசம்பத்தை பெற்றுப் பிறந்தவனாய் இருக்கிறாய் - 16.6 பார்த்தா இந்த உலகத்தில் தெய்வீகம் என்றும் அசுரம் என்றும் இருவகை உயிர்ப்பிறப்புகள் உள்ளன. தெய்வஇயல்பு குறித்து விரிவாக சொல்லப்பட்டது. அசுர இயல்பை சொல்கிறேன் கேள் - 16.7 அசுர ஜனங்கள், செய்யக்கூடிய செயல்கள் குறித்தும், செய்யக்கூடாத செயல்கள் குறித்த...

ஞானேஸ்வரர்

தினம் ஒரு மகானின் வாழ்க்கை வரலாற்றை அறிவோம் - ஞானேஸ்வரர்((கி.பி. 1275ம் வருடம்). - கோதாவரி நதிக்கரையில் ஆபேகாம் எனும் சிற்றூரில் வாழ்ந்த அந்தண குலத்தவரான கோவிந்த பண்டிதர்-நிருபமாதேவி தம்பதிக்கு 13-ம் நூற்றாண்டில் மகனாகப் பிறந்தான், விடோபா. சிறு வயதிலேயே ஆன்மிகத்தில் லயித்த விடோபா, புனிதத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டான். அப்படி, ஆலந்தி நகருக்கு வந்தபோது, அவரின் முகத்தில் படர்ந்த தேஜஸ் மற்றும் அவரது இறை சிந்தனை ஆகியவற்றால் அதிசயித்த சித்தோபந்த் எனும் அந்தணர், தன் மகள் ருக்மிணியை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். நாட்கள் நகர்ந்தன. ஒருநாள், மனைவியின் சம்மதத்துடன் காசிக்குச் சென்றார் விடோபா. அங்கே, சுவாமி ராமானந்தரைச் சந்தித்தவருக்குத் துறவறம் மேற்கொள்ளும் எண்ணம் எழுந்தது. தான் திருமணமானவன் என்பதை மறைத்து, ராமானந்தரிடம் தீட்சை பெற்று துறவறம் பூண்டார். பிறகு காசியிலேயே துறவு வாழ்க்கையைத் தொடர்ந்தார். அவரின் மனைவி ருக்மிணி கணவரைக் காணோமே எனப் பரிதவிப்புடன் காத்திருந்தாள். இந்த நிலையில், சுவாமி ராமானந்தர் யாத்திரை புறப்பட்டார். வழியில் ஆலந்தியை அடைந்தார். அவரைச் சந்தித்து தனது குறையைச்...

சைதன்யர்

Image
தினம் ஒரு மகானின் வாழ்க்கை வரலாற்றை அறிவோம் - சைதன்யர் - மகாபிரபு என்று போற்றப்படும் கிருஷ்ண சைதன்யர். கி.பி. 1486 பிப்ரவரி 18 அன்று மேற்கு வங்கம் நதியா மாவட்டத்திற்கு அருகே மாயாபூரில் சூரிய அஸ்தமனத்திற்குப் பின் சந்திரகிரகணம் நடக்கும் போது சைதன்யர் அவதரித்தார். அப்போது மக்கள் ஹரிபோல் ஹரிபோல் என்று கூவியபடி பாகீரதி நதியில் நீராடிக் கொண்டிருந்தனர். இந்த நிகழ்வே அவரது வாழ்க்கைப் பணியின் ஓர் அடையாளத்தைக் குறிக்கிறது. சைதன்யரின் தந்தை ஜகந்நாத மிஸ்ரர். தாயார் சசிதேவி. தாத்தாவானவர் குழந்தையின் தெய்வீக தேஜசைக் கண்டு இவன் பிற்காலத்தில் மிகப் பெரிய மகானாக விளங்குவான் என்று ஆருடம் கூறி, விஸ்வம்பர் என்று அக்குழந்தைக்குப் பெயரிட்டார். குழந்தையின் பொன்னிற மேனியைக் கண்டு அவ்வூர்ப் பெண்கள் கவுர்ஹரி என்ற பெயரிட்டார்கள். அவரது தாய் நிமாய் என்று அழைப்பார். அவரது குழந்தைப் பருவத்தில் நடந்த பல அசாதாரணமான நிகழ்வுகள் குறிக்கப்பட்டுள்ளன. குழந்தை அழுதால் ஹரி போல் என்றால் போதும் அழுகையை நிறுத்தி, சிரிக்க ஆரம்பிக்கும். பாலகனான விஸ்வம்பர் தனது தெய்வீக மகிமையை உணர்ந்தே இருந்தான். ஒருமுறை அவனது இல்லத்திற்கு வி...

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்-13

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம் - -part 13 - சமாதி நிலையை அடைந்த பிறகு அனேகமாக உடல் நிலைப்பதில்லை. ஏதோ சிலரது விஷயத்தில்,உலகிற்கு போதிப்பதற்காக உடல் நீடிக்கிறது.இத்தகைய மகாபுருஷர்கள் மக்களின் துயரத்தில் துடிக்கிறார்கள்.தாங்கள் ஞானம் பெற்றால் போதும் என்று நினைக்கின்ற சுயநலவாதிகள் அல்ல இவர்கள். - இறைக்காட்சிக்கு பிறகு பக்தனுக்கு அவருடைய திருவிளைடல்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது - எல்லோரும் வயிற்றிற்காக ஓடுகிறார்கள். யாரும் கடவுளை நினைக்க விரும்பவில்லை. - உலகில் வாழ்வது மிகக் கடினமானது. பல சாதனைகள் செய்து, இறையருள் பெற்ற ஒரு சிலரால்தான் வெற்றிபெற முடிகிறது.பெரும்பாலோரால் முடிவதில்லை. வாழவாழ அதில் மேலும் கட்டுண்டுவிடுகிறார்கள்.மேலும்மேலும் மூழ்குகிறார்கள்.மரண வேதனையை அனுபவிக்கிறார்கள் - இல்லறத்தானுக்கு கடமை உள்ளது. கடன் உள்ளது. தேவர்களுக்கும்,முன்னோர்களுக்கும்,ரிஷிகளுக்கும் மட்டுமின்றி குடும்பத்திற்கும் அவன் கடன்பட்டவன்.கற்புடைய மனைவியாக இருந்தால் அவன் அவளை காப்பாற்ற வேண்டும். குழந்தைகள் தக்க வயது வரும்வரை அவர்களை காப்பாற்றியே தீர வேண்டும்.சாதுக்கள் மட்டுமே சேர்த்துவைக்க கூடாது. ...

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-5

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-5 - நீ காண்கின்ற ஒவ்வொரு மனிதனும் கடவுள்தான்.ஆனால் அந்த இயல்பு அறியாமையால் மறைக்கப்பட்டுள்ளது- - நாம் ஏன் துன்பப்படுகிறோம்? ஏனெனில் நாம் கட்டுண்டிருக்கிறோம். நம்மை கட்டிவைத்திருப்பது யார்? நாமே- - பகுத்தறிவை பின்பற்றுபவர்கள் உண்மையை நோக்கி போக தயங்குகிறார்கள். உண்மை அவர்களை தேடி வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் - ஆயிரக்கணக்கான முறை மீண்டும் மீண்டும் பிறந்து இறந்துவிட்டாய்.இதோ இன்னொரு முறை பிறந்திருக்கிறாய்.இதற்கு முடிவே இல்லையா? - உலகில் நிகழும் சின்னஞ்சிறு அசைவுகூட என்மனத்தின் மீது ஒரு பதிவை உண்டாக்குகிறது.நமது அடிமைத்தனத்தை எண்ணிப்பாருங்கள் - உண்மையான நாகரீகம் என்பது புலன்களை அடக்குவது.கடவுளை நோக்கி செல்வது.பெரியபெரிய கட்டிடங்களை கட்டி வாழ்வதல்ல - மனைவிக்கு அடிமை,குழந்தைக்கு அடிமை,புகழுக்கு அடிமை,ஒரு வாய் சோற்றுக்கு அடிமை,இவை அனைத்திலிருந்தும் விடுபடுங்கள் - ஏதாவது ஒரு லட்சியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மரணம்வரை உறுதியாக அதைப் பின்பற்றுங்கள்.அதுவே முக்திக்கு வழி - கோவிலை நம்பமாட்டேன்,எந்த மதத்தையும் நம்பமாட்டேன் என்பவன் பகுத்தறிவுவாதி அல்ல - எ...

பீபீ நாச்சியார்

Image
தினம் ஒரு மகானின் வாழ்க்கை வரலாற்றை அறிவோம் - பீபீ நாச்சியார் - ராமானுஜர் திருநாராயணபுரத்தில் பகவான் மஹாவிஷ்ணுவின் பூஜைகளை முடித்துவிட்டு ஒருநாள் அயர்ந்து உறங்கினார். அப்போது மஹாவிஷ்ணு, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ராமானுஜரின் கனவில் தோன்றினார். ராமானுஜா! உன் தொண்டில் நான் மகிழ்ந்தேன். ஆனால், எளிய பக்தர்களும் என்னைக் காண, டில்லி பாதுஷாவிடம் உள்ள என் உற்சவ விக்கிரகமான செல்வப்பிள்ளையைக் கொண்டு வா என்று கூறினார். ராமானுஜர் இரண்டு மாதங்கள் பயணம் செய்து டில்லி அரண்மனையை அடைந்தார். அவரது திருமேனி ஒளியையும் அறிவையும் கண்டு மகிழ்ந்த பாதுஷா, அவர் வந்த காரணத்தை வினவினார். அரசே! நான் செல்வப்பிள்ளையை எடுத்துச் செல்ல வந்துள்ளேன் என்று ராமானுஜர் கூற, மன்னர், அப்படியே ஆகட்டும்! என்றார். எவ்வளவு தேடியும் செல்வப்பிள்ளையின் விக்கிரகம் கிடைக்கவில்லை. ராமானுஜர் கண்களில் நீர் மல்கக் கைகளைக் கூப்பியபடி வணங்கினார். ராமப்ரியரே! என் செல்வப்பிள்ளையே! எங்கிருக்கிறீர்? வாருங்கள்! என்று மனமுருகி வேண்டினார். அரசகுமாரியின் பெயர் பீபீ லகிமார். அவள் செல்வப் பிள்ளையை தனது மஞ்சத்தில் வைத்து அன்புடன் பூஜித்து வந...