Posts

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 49

வகுப்பு-49   நாள்-4-3-2020 - ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் - சகுணபிரம்மம், நிர்குணபிரம்மம் என்று இரண்டு நிலைகள் இருக்கின்றன. - அர்ஜுனன் கேட்கிறான் - ஏவம் ஸததயுக்தா யே பக்தாஸ்த்வாம் பர்யுபாஸதே। யே சாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோகவித்தமா:॥ 12.1 ॥   12.1 இவ்வாறு எப்போதும் யோகத்தில் உறுதிப்பாட்டுடன் உம்மை உபாசிக்கும் பக்தர்கள் மற்றும் பிரம்மத்தை உபாசிக்கும் ஞானிகள் இவர்களில் யோகத்தை நன்கு அறிந்தவர் யார்? - ஸ்ரீபகவான் சொன்னது   மய்யாவேஷ்ய மநோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே। ஷ்ரத்தயா பரயோபேதா: தே மே யுக்ததமா மதா:॥ 12.2 ॥   12.2.என்னிடம் மனதைவைத்து, யோகத்தில் நிலைத்தவராய், மேலான ச்ரத்தையுடன் கூடியவராய் யார் என்னை உபாசிக்கிறார்களோ அவர்கள் யோகத்தில் நிலைபெற்றவன் என்பது என் கருத்து - யே த்வக்ஷரமநிர்தேஷ்யம் அவ்யக்தம் பர்யுபாஸதே। ஸர்வத்ரகமசிம்த்யம்ச கூடஸ்தம் அசலம்த்ருவம்॥ 12.3 ॥   ஸம்நியம்யேந்த்ரியக்ராமம் ஸர்வத்ர ஸமபுத்தயா:। தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூதஹிதே ரதா:॥ 12.4 ॥   12.3,4 ஆனால் யார் எங்கும் சமபுத்தியுள்ளவ...

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 48

வகுப்பு-48   நாள்-2-3-2020 - ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் - நான்குவிதமான வழிபாடுகளைப்பற்றி ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். 9.25 - என்னை வழிபடுபவர்கள் என்னை அடைகிறார்கள். இதில் என்னை என்பதன் அர்த்தம் என்ன? - யோக மார்க்கத்தில் செல்பவர்களின் மனம் புருவமத்தியை அடையும்போது, இந்த உலகத்தில் உள்ள எல்லாம் இறைவனே என்பதை அனுபவப்பூர்வமாக அறிகிறார்கள். இறைவனே மனிதர்களாகவும்,மிருகங்களாகவும்.தேவர்களாகவும், செடி கொடிகளாகவும், அசைவன,அசையாதவை,உடல்கள்,மனம்.புத்தி, அனைத்து கிரகங்கள்,சூரியர்கள் உட்பட இந்த உலகத்தில் தூறநிலையில் இருப்பவை, சூட்சும நிலையில் உள்ளவை. பல்வேறு உலகங்களில் வாழும் தேவர்கள் உட்பட அனைவரும் இறைவனின் வெளிப்பாடுகளாகவே தெரிகிறது.     அந்த உயர்ந்த நிலையை அடைந்த பின்,இன்னும் மேலே சென்று உச்சந்தலையில் உள்ள சகஸ்ராரத்தை அடையும்போது உருவமற்ற பிரம்மத்தின் காட்சி கிடைக்கிறது.அதில் ஒன்றுகலக்கும்போது   உடல் செயலற்றுவிடுகிறது. - சிலர் பிரம்மத்துடன் ஒன்று கலப்பதில்லை.ஆனால் மீண்டும் உடலுக்குள் வருவதில்லை. அப்படிப்பட்டவர்கள் மிகவும் சூட்சுமமான ஒள...

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 47

வகுப்பு-47   நாள்-1-3-2020 - ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் - நான்குவிதமான வழிபாடுகளைப்பற்றி ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். 9.25 - தேவர்களை வழிபடுபவர்கள் தேவர்களை அடைகிறார்கள். தேவர்கள் என்பவர்கள் யார்? - மனிதர்கள் இறந்த பிறகு அவர்கள் செய்யும் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப சூட்சும உடல் அமைகிறது என்று பார்த்தோம்.அதிகம் புண்ணியம் செய்தவர்கள் மேல் உலகங்களை அடைகிறார்கள். அதிகம் பாவம் செய்தவர்கள் கீழ் உலகங்களை அடைகிறார்கள். புண்ணியம்.பாவம் இரண்டையும் கலந்து செய்திருப்பவர்கள் மறுபடியும் இந்த பூமியில் பிறக்கிறார்கள்.   நாட்டை ஆளும் அரசர்களுக்கு அதிகம் புண்ணியம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. இறந்தபிறகு தேவ உடலைப்பெற்று சொர்க்கத்தில் சென்று இன்னும் அதிகம் இன்பத்தை அனுபவிக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே பல யாகங்களைச் செய்கிறார்கள். யாகங்கள் மூலம்   ஏற்கனவே இருக்கும் தேவர்களுக்கு தேவையானவற்றைக்கொடுக்கிறார்கள்.தேவலோகத்தில் தனக்கு ஒரு இடம் ஒதுக்கும்படி கேட்டுக்கொள்கிறார்கள். யாகத்தின் முடிவில் தங்களிடம் உள்ள சொத்துக்களை பிராமணர்களுக்கும், நல்லவர்க...

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 46

வகுப்பு-46   நாள்-28-2-2020 - ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் - நான்குவிதமான வழிபாடுகளைப்பற்றி ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். 9.25 - பித்ருக்களை வழிபடுபவர்கள் பித்ருக்களை அடைகிறார்கள் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார் - மனிதன் காடுகளில் வாழ்ந்த காலத்தில் இறந்தவர்களை புதைப்பது வழக்கம். அவ்வாறு புதைக்கப்படும் இடங்களைச்சுற்றி இறந்தவர்களின் ஆவி அலைந்துகொண்டிருக்கும் என்று மக்கள் நம்பினார்கள். சிலர் இறந்த உடலுடனேயே அந்த ஆவி தூங்கிக்கொண்டிருக்கும் என்று நம்பினார்கள். - மனிதன் சமவெளியை நோக்கி வந்த காலத்தில் இறந்தவர்களின் உடலை பாதுகாப்பாக புதைத்தார்கள்.நினைவுச்சின்னங்களை எழுப்பினார்கள். அவ்வப்போது அவர்கள் விரும்பும் உணவுகளை படைத்தார்கள். ஆரியர் கலாச்சாரம் விரிவடைய ஆரம்பித்த காலத்தில், இறந்துபோன முன்னோர்கள் இந்த உலகத்தில் தங்கி இருக்கக்கூடாது. மேல் உலகத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்பினார்கள். எனவே அவர்களது உடலை எரித்தார்கள்.உடல் இருந்தால்தானே பற்று ஏற்படும்.அதை எரித்துவிடுவோம் என்று முடிவு செய்தார்கள். எரியூட்டப்பட்ட பிறகு அந்த ஆவி பூமியைவிட சற்று உயர்ந்த ...