ஆவி உலகம்-தொடர்-பாகம்-10
ஆவி உலகம்-தொடர்-பாகம்-10 .. பாம்பு புற்று வழிபாடு நாகராஜா,நாகராணி போன்ற வழிபாடுகளின் பின்னணி என்ன? ஆவி பாதித்த மனிதனை காப்பாற்ற என்ன வழி? . திருமணம் ஆகாத ஆண் அல்லது பெண் பாம்பு கடித்து இறந்தால் அவர்களை நாகதேவதையாக,நாகராஜாவாக வழிபடும் பழக்கம் முற்காலத்தில் இருந்துள்ளது. நாய் கடித்து இறப்பவன் கடைசி நாளில் நாயைப்போல கத்திகத்தி சாவதை போல. பாம்பு கடித்து இறப்பவரின் சூட்சும உடல் பாம்பின் குணங்களால் பாதிப்படைகிறது. இறந்தவரின் சூட்சுமஉடல் பாதி மனித குணமாகவும் பாதி பாம்பின் குணமாகவும் மாறிவிடுகிறது. பாம்பு தொல்லைகள் ஏற்படாமல் இருப்பதற்காக மக்கள் நாகதேவதை வழிபாடுகளை செய்வார்கள். .. பெரும்பாலான கடவுளின் உடலில் பாம்பு மாலைபோல சுற்றிக்கொண்டிருக்கிறதே! விஷ்ணு பாம்பின்மீது படுத்திருப்பதுபோல ஓவியங்கள் உள்ளனவே இதற்கு பின்னால் உள்ள கருத்து என்ன? .. அது உண்மையில் பாம்பு இல்லை. அது ஒரு தத்துவத்தை விளக்குவதற்காக வரையப்பட்ட ஓவியங்கள். நாகம் என்றால் ந+அகம் என்று பிரித்து படிக்க வேண்டும். ”அகம் ” என்றால் நான். ”ந ” என்றால் இல்லை என்று அர்த்தம். அகம் இல்லாதது. நான் இல...