இந்துமதம் என பெயர் வரக்காரணம்

இந்துமதம் வகுப்பு

1.இந்துமதம் என பெயர் வரக்காரணம்

..

வடமொழியில் ஹிந்து என்பதை தமிழில் இந்து என்று அழைக்கிறோம்

தமிழில் இந்து என்றால் நிலா என்று ஒரு அர்த்தம் உள்ளது.

பாரசீகர்கள் பாரததேசத்தை சிந்துநதியை மையப்படுத்தி அழைத்தார்கள். 

சிந்துஸ்தான் என்று அழைத்தார்கள் பின்பர் அது மருவி ஹிந்துஸ்தான் என்று ஆனது.

பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,உஸ்பெகிஸ்தான்,கஜகிஸ்தான் போன்ற பெயர்களில் வரும் ஸ்தான் என்பது ஸ்தலம்(இடம்) என்ற வடமொழியின் மருவு ஆகும்.ஆங்கிலத்தில் ஸ்டான்ட் என்று மருவியுள்ளது.

..

சிந்து நதியின் மறுகரையில் வாழ்ந்த மக்களை அழைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட வார்த்தை ஹிந்துஸ்தான்.

இந்த வார்த்தை பிற்காலத்தில் பாரதம் முழுவதும் வாழ்ந்த மக்களை குறிக்கும் வார்த்தையாக மாறிவிட்டது.

.

வெளிநாட்டு மக்களைப்பொறுத்தவரை பாரதத்தில் வாழ்ந்த மக்கள் ஹிந்துக்கள்.

ஹிந்துக்கள் பின்பற்றிய மதம் ஹிந்துமதம். 

.

பாரசீகர்கள்,அரேபியர்கள்,யூதர்களுக்கு ஒரு மதம்தான் இருந்தது. பிறமதங்கள் வளர்ச்சியடையாமல் நசுக்கப்பட்டுவிட்டன.

ஆனால் பாரததேசத்தில் பல மதங்கள் பலரால் பின்பற்றப்பட்டு வந்தது. 

அவைகள் பற்றி பாரசீகர்களுக்கு தெரியாது. பொதுவாக அனைவரையும் ஹிந்துக்கள் என்றும் அவர்கள் பின்பற்றும் மதத்தை ஹிந்துமதம் என்றும் அழைத்தார்கள்.

..

பாரசீகர்களின் பார்வையில் புத்தமதம்,சமண மதத்தை பின்பற்றியவர்களும் ஹிந்துக்கள்தான்.

ஆப்கானிஸ்தானில் அந்த காலத்தில் புத்த மத்தினரே அதிகம் வாழ்ந்தார்கள்.முஸ்லீம்களால் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அங்கு ஒரு மலை இருக்கிறது.அந்த மலைக்கு ஹிந்துகுஷ் என்றே பெயர்.ஹிந்துக்கள் கொலை செய்யப்பட்ட மலை என்று பெயர்.

..

தற்போது பாரசீகர்கள் மிகசிறிய அளவில்தான் இருக்கிறார்கள்.மற்றவர்கள் முஸ்லீம்களாக மதம்மாறிவிட்டார்கள்.ஆனால் ஒரு காலத்தில் ஆசியாவின் பெரும்பகுதியை பாரசீகர்கள் ஆண்டுவந்தார்கள்.

பல பாரசீக அறிஞர்கள் அந்த காலத்தில் வாழ்ந்தார்கள்

..

பாரசீகர்கள்,முகமதியர்கள்,யூதர்களின் பார்வையில் பாரததேசத்தின் பெயர் ஹிந்துஸ்தான்.

பாரசீகர்கள்,முகமதியர்கள்,யூதர்களின் பார்வையில் ஹிந்துஸ்தானில் வாழ்ந்த மக்கள் ஹிந்துக்கள்

பாரசீகர்கள்,முகமதியர்கள்,யூதர்களின் பார்வையில் ஹிந்துஸ்தானின் மதம் ஹிந்துமதம்

..

முஸ்லீம்கள் ஹிந்துஸ்தானிற்குள் வந்தபோது அவர்கள் பார்வையில் எல்லோருமே அவர்களுக்கு எதிரிகளாகவும்,காபிர்களாகவும், கொலைசெய்யப்பட வேண்டிவர்களாகவும்,அவர்களது வழிபாட்டு தலங்கள் அழிக்கப்பட வேண்டிவையாகவுமே தெரிந்தது.அவர்களது மதம் அதைத்தான் போதிக்கிறது


எனவே முஸ்லீமாக மதம் மாறாதவர்கள் அனைவரும் கொலை செய்யப்படவேண்டும்,அவர்கள் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் இடிக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்துடன் ஹிந்துஸ்தானிற்குள் வந்தார்கள்.

அவர்களால் ஹிந்துஸ்தானில் உள்ள அனைவரும் பாதிக்கப்பட்டார்கள். புத்தமதம்,சமணமதம்,வேதமதத்தை பின்பற்றிவர்கள் என்று எல்லோரும் பாதிக்கப்பட்டார்கள்.

-

புத்த மதத்தினர் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள் சிலர்.திபெத்,பூடான்,இமாச்சல் போன்ற மலைவாழ் பகுதிகளுக்கு தப்பிச்சென்றார்கள்.

பிராமணர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள் சிலர் தென்இந்தியா பக்கம் வந்தார்கள்.

இது தவிர உயிருக்கு பயந்து மதம் மாறியவர்கள் ஏராளம்

.

பெண்கள் அடிமைகளாக பிடிக்கப்பட்டு வெளிநாட்டு சந்தைகளில் ஏலம் விடப்பட்டார்கள்.

மதம் மாற மறுத்த ஆண்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டார்கள்.

பொருட்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது.

ஹிந்துக்களின் தலைகள் மலைகள் அளவுக்கு பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்டன.

..

ஐநூறு ஆண்டுகால முகமதியர்களின் கொடுமையால் வடஇந்தியாவில் பெரும்பாலான இடங்களில் இந்துக்களே இல்லை.

அதன் பின்னர் வடஇந்தியாவில் பல்வேறு மகான்கள் தோன்றினார்கள்.மதம்மாறியவர்களை மீண்டும் படிப்படியாக தாய் மதத்திற்கு கொண்டு வந்தார்கள்.அவர்களின் கடின முயற்சியால் ஓரளவு ஹிந்துக்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

..

ஹிந்துமதம் என்ற பெயரை நாம் விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை.அன்னியர்கள் நம்மீது திணித்த வார்த்தை இது. எனவே இதை நீக்க வேண்டுமா?

.

சைவர்களுக்கு சைவன் என்ற பெயர் இருக்கிறது. வைணவர்களுக்கு வைணவன் என்று பெயர் உள்ளது. சீக்கியர்களுக்கு சீக்கிய மதம் உள்ளது. இப்படி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது.அப்படி இருக்கும்போது ஹிந்துமதம் என்ற பெயரை ஏன் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்?

.

ஹிந்துமதம் என்ற ஒரு தனியான மதம் இல்லாதபோது அந்த பெயரை ஏன் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்?

.

ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர் செயல் உண்டு என்பது தான் விதி. 

காபிர்கள் என்ற முத்திரையோடு  கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளார்கள். 

அவர்களின் சாபம் இன்னும் நீங்கவில்லை. 

..

இந்த சம்பவத்தை நீங்கள் உங்கள் மனக்கண் முன்னால் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும்.

ஒரு கும்பல் கையில் வாளுடன், அல்லாகு அக்பர் என்ற முழக்கத்துடன் வந்து வீட்டில் உள்ள ஆண்களைக்கொன்று,பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கி,அவர்களையும்,குழந்தைகளையும் கையில் விலங்கு பூட்டி மிருகங்களை இழுத்து செல்வதுபோல சென்று வெளிநாட்டுசந்தைகளில் வியாபாரம் செய்யப்படுதை உங்கள் மனக்கண்முன் கொண்டுவரவேண்டும். 

அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? 

தன் கண்முன் கணவன் கொலை செய்யப்படுவதையும்,குழந்தைகள் தங்களிடமிருந்து பிரிக்கப்படுவதையும், வலுக்கட்டாயமாக பாலியல் உறவுக்கு உட்படுத்துவதையும் சந்திக்கும் பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்.

இவைகளை மறக்க வேண்டுமா?

ஒன்றிரண்டுபேர் அல்ல சுமார் 500 ஆண்டுகளுக்கும்மேலாக  கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இந்த வரலாறுகளைப்பற்றி விரிவாக படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

..

இறந்தவர்களின் சாபம் நீங்கும்வரை நாம் ஹிந்துக்களாகவே இருப்போம்.

அதன் பிறகு வேண்டுமானால் வேறு பெயரை வைத்துக்கொள்ளலாம்.

அதற்கு முன்பு யாராவது ஹிந்து என்ற பெயரை மாற்ற முயற்சிசெய்தால் உயிரிழந்த கோடிக்கணக்கான மக்களின் சாபம் அவர்களை தண்டிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அது மட்டுமல்ல இந்து என்ற பொதுப்பெயரிலிருந்து விலகி தனியாக செல்லும் மதங்கள் படிப்படியாக அழிவையே சந்திக்கும் என்பதில் சந்தேகம் இல்லை





 

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?