அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு
அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு - அன்னை ஸ்ரீசாரதாதேவி கல்கத்தாவில் ஜெயராம்பாடி என்ற கிராமத்தில் 1853 டிசம்பர் 22 ஆம் நாள் ராமசந்திர முகர்ஜிக்கும் சியாமா சுந்தரி தேவிக்கும் முதற்குழந்தையாகப் பிறந்தார். நாட்டுப்புறத்தில் வளரும் மற்ற பெண் குழந்தைகளைப்போன்று இளைய குழந்தைகளை கவனித்துக்கொள்ளுதல்,மாடுகளைப்பேணுதல்,வயலில் வேலை செய்யும் தந்தைக்கும் மற்றவர்களுக்கும் உணவு கொண்டு செல்லுதல் போன்ற வீட்டு காரியங்களில் இவருடைய இளமை பருவம் கழிந்தது. இவர் பள்ளி சென்று படித்ததில்லை.ஆனால் பிற்காலத்தில் தம் சொந்த முயற்சியால் சிறிது படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார். - அந்த காலத்தில் இளமை திருமணங்களை சமுதாயம் ஆதரித்தது. சிலவேளைகளில் பெண் சிறியவளாகவும் ஆண், வயது முதிர்ந்தவராகவும் இருப்பதுண்டு. ஆண்கள் மறுமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்,பெண்களுக்கு அந்த உரிமை இல்லை. சாதராவுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது திருமணம் நடந்தது.அப்போது ஸ்ரீராமகிருஷ்ணருக்கு வயது 23. பெண் பெரியவளாக வளர்ந்த பிறகுதான் மாப்பிள்ளைவீட்டிற்கு செல்வது வழக்கம். சாரதாதேவி தமது 19வது வயதிற்கு பிறகே ராமகிருஷ்ணருடன் சேர்ந்து வாழ ...
























































































Comments
Post a Comment