அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-17
அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு - பாகம் -17 ஆன்மீகப் பயிற்சியுடன் , அன்றாடம் நடைமுறை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களையம் குருதேவர் சாரதைக்குப் போதித்தார் . அவர் அளித்த ஓரிரு அறிவுரைகளைக் கூறினாலே இதன் உண்மை புரிந்துவிடும் . குடும்ப வாழ்வின் மிகச் சிறிய அம்சங்களைக் கூட அவர் விடவில்லை . எந்தப் பொருளையும் பயன்படுத்திவிட்டு , கண்ட இடத்தில் வைக்கக் கூடாது . அதற்கரிய இடத்தில்தான் வைக்க வேண்டும் . அடிக்கடி பயன்படும் பொருட்களைக் கைக்குச் சுலபமாக எட்டும் வகையில் அருகில் வைத்துக்கொள்ள வேண்டும் . எப்போதோ தேவைப்படும் பொருட்களை தூரத்தில் வைக்கலாம் . ஓரிடத்திலிருந்து ஒரு பொருளை எடுத்தால் , மீண்டும் அதை அதே இடத்தில் வைக்க வேண்டும் . இப்படிச் செய்தால் , இருட்டில்கூடச்சிறிதும் தடுமாறாமல் அந்தப் பொருட்களை எடுக்க முடியும் . ’ ...