Posts

வாழ்க்கைக் கல்வி -1

சீக்ஷா (அதாவது சிக்ஷா) என்றால் கல்வி; வல்லீ என்றால் பகுதி. கல்விபற்றி சிறப்பாகக் கூறுவதால் இந்தப் பகுதி சீக்ஷா வல்லி என்று அழைக்கப்படுகிறது. மனிதனுக்கு இரண்டு வகையான தேவைகள் உள்ளன. உணவு, உடை, தங்குமிடம் போன்றவை முதல் வகை; இவை அடிப்படைத் தேவைகள். ஆனால் இவற்றால் மட்டும் அவனால் திருப்தியுற்று நின்றுவிட முடிவதில்லை. அன்பு வேண்டும், ஆற்றல் வேண்டும், இன்பம் வேண்டும், அறிவு வேண்டும், இறைவனை நாட வேண்டும் - இவ்வாறு எத்தனையோ வேண்டியுள்ளன. ஒரு கோணத்தில் பார்க்கும் போது, அடிப்படைத் தேவைகளைவிட இவை முக்கியமானவை. இவை வாழ்க்கைத் தேவைகள் (ஞுதுடிண்tஞுணtடிச்டூ ணஞுஞுஞீண்). இந்த இரண்டுவகைத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்குத் துணை செய்கின்ற கல்வியே முழுக்கல்வியாக முடியும். அத்தகைய கல்வியையே நாம் வாழ்க்கைக் கல்வி என்கிறோம். வேத கால இந்தியாவில், ஏன், அன்னியர் படையெடுப்புகளால் நமது கலாச்சாரம் தடுமாறும்வரை இந்தியாவில் அத்தகைய கல்வியே நிலவியது. அதுவே குருகுலக் கல்வி முறை, புறச் சூழ்நிலை காரணமாகவும், பெற்றோர், சமுதாயம் என்று பலரது ஆதிக்கம் காரணமாகவும் மனம் ஒரு நிறம் பெறுமுன்னரே. அதாவது மிகச் சிறு வயதிலேயே சிறுவர...

தைத்திரீய உபநிஷதம் - ஒரு கண்ணோட்டம்

தைத்திரீய உபநிஷதம் - ஒரு கண்ணோட்டம் - வேதங்கள் : உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பாரதத் திருநாடு ஆன்ம ஒளியில் விழித்தெழுந்தது, அதன் தவப் புதல்வர்களாகிய ரிஷிகள், இருளைக் கடந்து, பொன்னிறத்தில் ஒளிரும் மாபெரும் இறைவனை நான் அறிந்துகொண்டேன். அவரை அறிவதால் மட்டமே மரணத்தை வெல்ல முடியும். வேறு எந்த வழியும் இல்லை. (வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்யவர்ணம் தமஸ: பரஸ்தாத் தமேவ விதித்வா ஸதிம்ருத்யுமேதி நான்ய: பந்தா வித்யதேஸயனாய- சுவேதாஸ்வதர உபநிஷதம், 3.8.) அழியாத அமரத்துவத்தின் குழந்தைகளே, கேளுங்கள் (ச்ருண்வந்து விச்வே அம்ருதஸ்ய புத்ரா:- சுவேதாஸ்வதர உபநிஷதம், 2.5) என்று பூமியில் வாழ்பவர்களை மட்டுமல்ல, பிற உலகங்களில் வாழ்வோரையும் அறைகூவினர். குறித்து வைக்கப்பட்ட சரித்திரமோ, பாரம்பரியத்தின் மங்கிய வெளிச்சமோகூட ஊடுருவ முடியாத, காலத்தின் அந்த நீண்ட நெடுந்தொலைவில் இந்த உலகைப் புனிதமாக்கியபடி வாழ்ந்த அந்த ரிஷிகள் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். உலகிலேயே மிகப்பழயை நூல் இந்த சிந்தனைக் கருவூலம்தான் இது எப்போது தோன்றியது என்பது ஒருவருக்கும் தெரியாத...

பீபீ நாச்சியார்

Image
பீபீ நாச்சியார் - ராமானுஜர் திருநாராயணபுரத்தில் பகவான் மஹாவிஷ்ணுவின் பூஜைகளை முடித்துவிட்டு ஒருநாள் அயர்ந்து உறங்கினார். அப்போது மஹாவிஷ்ணு, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ராமானுஜரின் கனவில் தோன்றினார். ராமானுஜா! உன் தொண்டில் நான் மகிழ்ந்தேன். ஆனால், எளிய பக்தர்களும் என்னைக் காண, டில்லி பாதுஷாவிடம் உள்ள என் உற்சவ விக்கிரகமான செல்வப்பிள்ளையைக் கொண்டு வா என்று கூறினார். ராமானுஜர் இரண்டு மாதங்கள் பயணம் செய்து டில்லி அரண்மனையை அடைந்தார். அவரது திருமேனி ஒளியையும் அறிவையும் கண்டு மகிழ்ந்த பாதுஷா, அவர் வந்த காரணத்தை வினவினார். அரசே! நான் செல்வப்பிள்ளையை எடுத்துச் செல்ல வந்துள்ளேன் என்று ராமானுஜர் கூற, - மன்னர், அப்படியே ஆகட்டும்! என்றார். எவ்வளவு தேடியும் செல்வப்பிள்ளையின் விக்கிரகம் கிடைக்கவில்லை. ராமானுஜர் கண்களில் நீர் மல்கக் கைகளைக் கூப்பியபடி வணங்கினார். ராமப்ரியரே! என் செல்வப்பிள்ளையே! எங்கிருக்கிறீர்? வாருங்கள்! என்று மனமுருகி வேண்டினார். அரசகுமாரியின் பெயர் பீபீ லகிமார். அவள் செல்வப் பிள்ளையை தனது மஞ்சத்தில் வைத்து அன்புடன் பூஜித்து வந்தாள். ராமானுஜர் அழைத்தபோது அவள் தனது அறையில்...

அவதாரபுருஷர்கள் இரண்டு நிலைகளில் இந்த உலகத்தை பார்க்கிறார்கள்

Image
இந்துமத தத்துவங்கள் - அவதாரம் - அவதாரபுருஷர்கள் இரண்டு நிலைகளில் இந்த உலகத்தை பார்க்கிறார்கள் துவைதநிலையில் அதாவது இந்த உலகம் உண்மை என்ற நிலையில் இருந்து பார்க்கும் போது அவன் சம்சாரத்தளையில் கட்டுப்பட்டவன்.அத்வைத நிலையில் தவாது நான் ஆன்மா என்ற நிலையில் பார்க்கும் போது இந்த உலகம் ஒரு தோற்றம். குழந்தைப்பருவத்திலிருந்தே அவதாரபுருர்கள் உயர்ந்த உணர்வு தளங்களில் திளைப்பது பற்றியும்,பல்வேறு உயர்ந்த காட்ச்சிகளை பார்ப்பது பற்றியும் அவர்களது வாழ்க்கையை படிக்கும்போது காண்கிறோம். அவதாரபுருஷர்கள் பரம்பொருளை உணர்ந்து அத்வைத நிலையில் சிறிதுகாலம் இருந்துவிட்டு.அதில் திருப்தியடைந்து பின்னர் கீழ்நிலைக்கு இறங்கிரும்போது சாதாரணமக்களின் பார்வைக்கு சாதாரணமனிதனாக தென்படுகிறார்கள்.ஆனால் அவர்கள் உலகப்பொருட்களின்,ஆரம்பம்,நடு,முடிவு அனைத்தையும் அறிகிறவர்களாக இருக்கிறார்கள். - பிரம்மத்தை அல்லது கடவுளை எல்லா உயிரிலும் காண்பதே ஆன்மீக சாதனையின் முடிவு.சாதனையில் இறுதிக்கட்டத்தில் தான் இது மனிதனுக்கு வாய்க்கிறது.இந்துக்களின் அடிப்படை நுலான வேதங்கள் இதையே வலியுறுத்துகின்றன.இவ்வுலகில் நாம் காணும்,கல்,மண்,கொடி,செடி,...

சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்-பாகம்-6

சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்-பாகம்-6 - துரதிர்ஷ்டவசமாக, சன்னியாசிகளுக்குகான நியதிகளால் எல்லோரையும் கட்டுப்படுத்தும் பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டது. இது மிக பெரிய தவறாகும். இந்தத் தவறைத் தவிர்த்திருந்தால் இப்போது நீங்கள் இந்தியாவில் காண்கின்ற இவ்வளவு வறுமையும் துன்பமும் இருந்திருக்காது.  சாதாரண ஏழையின் வாழ்க்கைக்கு கூட அவனுக்கு சிறிதும் பயனில்லாத ஆன்மீக மற்றும் ஒழுக்க விதிகளால் கட்டி நெருக்கப்பட்டுள்ளது.  உங்கள் கைகளை விலக்கிக் கொள்ளுங்கள் ! அவன் வாழ்க்கையை கொஞ்சம் அனுபவிக்கட்டும்று. அதன்பிறகு அவன் தன்னை உயர்த்திக் கொள்வான். தானாகவே அவனிடம் துறவு தோன்றும். - இதுவரை இல்லாத அளவிற்குப் பெரும் சிறப்புடன் இந்தியா உருவாகிக் கொண்டிருக்கறது என்பதில் சந்தேகமில்லை. பழங்கால ரிஷிகள்அனைவரைவிடவும் மகத்தான ரிஷிகள் தோன்றப் போகின்றனர். மற்ற உலகங்களில் வாழ்கின்ற உங்கள் முன்னோர்கள் தங்கள் வழித்தோன்றல்களாகிய உங்களின் புகழையும் கீர்த்தியையும் கண்டு திருப்தி மட்டும் அடையவில்லை, பெருமையும் அடைவார்கள் என்பதை நான் காண்கிறேன். ---- என்சகேதரர்களே, நாம் எல்லோரும் கடுமையாக உழைப்போம். தூங்குவ...